search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபருக்கு சிகிச்சை"

    மதுரை மேம்பாலம் அடியில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபரின் கால்கள் துண்டானது.
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள மலையம்பட்டி அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் மாசானமுத்து (வயது 35). இவர் இன்று காலை மதுரை மேம்பாலம் அடியில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த பாதையில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் காலிப்பெட்டிகள் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாசானமுத்து கால்கள் மீது ரெயில் சக்கரங்கள் ஏறின. இதில் அவரது 2 கால்களும் துண்டாயின.

    தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாசானமுத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். #tamilnews
    ×